• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய தாதிகள் விடுதியொன்றை நிருமாணித்தல்
- மத்திய அரசாங்த்தின் சுகாதார அமைச்சினால் நிருவகிக்கப்படும் வடமாகாணத்திலுள்ள முக்கிய வைத்தியசாலையொன்றான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வடமாகாண மக்களின் சார்பில் சகல பிரிவுகளையும் உள்ளடக்கி நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை பேணி வருகின்றது. 1,750 பேர்களான இந்த வைத்தியசாலையின் பதவியணியில் 407 பேர்கள் தாதி உத்தியோகத்தர்களாவதோடு, அவர்களுக்கு போதுமான அளவு விடுதி வசதியை வழங்க முடியாமை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாயுள்ளது. இதற்கு மாற்று வழிவகையாக வைத்தியசாலை மனையிடத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டடத்தின் ஒரு பகுதியை தாதிகள் விடுதியாக மாற்றும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.