• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண்களுக்கு எதிரான சகலவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் சமவாயத்தின் 20(1) ஆம் பிரிவைத் திருத்துதல்
- பெண்களுக்கு எதிரான சகலவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் சமவாயம் ஐக்கிய நாடுகளின் பொதுத் சபையினால் 1979 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டதோடு, இலங்கையில் இந்த சமவாயத்துக்கு 1981 ஆம் ஆண்டிலிருந்து செயல்வலுவாக்கம் அளிக்கப்பட்டது. இந்த சமவாயம் பெண்களுக்கு எதிரான சகலவித பாகுபாடுகளும் ஒழிக்கப்படுவதற்கும் பால் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அடிப்படையாயுள்ளது. பெண்களுக்கு எதிரான சகலவித பாகுபாடுகளையும் ஒழித்தல் பற்றிய ஐக்கிய நாடுகளின் குழுவின் கோரிக்கையின் பேரில் இந்த சமவாயத்தின் 20(1) ஆம் பிரிவை அதாவது தேவையானவாறு வருடாந்த கூட்டங்களை நடாத்துவதற்கு இடமளிக்கும் விதத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை இலங்கை அரசாங்கத்தினால் முறையாக ஏற்றுக் கொள்வது சம்பந்தமாக மகளிர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.