2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழில் வாய்ப்பு உரிமப்பத்திர முறையின் கீழ் (EPS) ஊழியர்களை அனுப்புவதற்கு இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கை தொழிலாளர்களுக்கு கொரிய குடியரசில் தொழில் வழங்கும் செயற்பாட்டின் வெளிப்படையான தன்மையையும் வினைத்திறனையும் அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பினையும் அதிகரிப்பதற்கும் பொருத்தமான வேலைத்திட்டமொன்றை பேணும் பொருட்டு உரிமப்பத்திரமுறையொன்றை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் கொரிய குடியரசின் தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சுக்குமிடையில் மேற்போந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தும் பொருட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |