• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பரீட்சைகள் திணைக்கள மனையிடத்தில் பல்பணி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பணிகளை மிக பயனுள்ள விதத்திலும் வினைத்திறனுடனும் நடாத்திச் செல்தல், பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வழங்குதல், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத விதத்தில் வார நாட்களில் பரீட்சைகளை நடாத்துவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல் போன்ற நோக்கங்களை வெற்றி கொள்ளும் நோக்கில் இலங்கை பரீட்சைகள் திணைக்கள மனையிடத்தில் நிருமாணிக்கப்படவுள்ள பல்பணி கட்டடத்தை, இந்த கருத்திட்டத்தின் மதியுரைஞர்களான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தினால் மதிப்பிடப்பட்டவாறு 615 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் நிருமாணிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.