• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு கருத்திட்டத்தை மீளமைப்பதற்காக மேலதிக நிதித் தேவை
- யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு கருத்திட்டத்திற்கான முதலாவது திட்டத்தின் கீழ் இரணைமடு குளத்திலிருந்து போதுமான அளவு நீர் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமற் போயுள்ளது. ஆதலால், உரிய பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் வளத்திலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய நீர் உட்பட கடல் நீரை சுத்திகரித்து பெற்றுக் கொள்ளப்படும் நீரை பயன்படுத்தி இந்த நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் இந்த பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு France AFD நிறுவனத்துடனும் கலந்துரையாடும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.