2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - 2015 சிறுபோகத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நேரடியாக கமக்காரர்களிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதோடு, இதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு பணிகள் உரிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட கிராமிய மட்ட உத்தியோகத்தர்களினால் செய்யப்படும். 2015 சிறுபோகத்தில் "கீரி சம்பா" மற்றும் "சம்பா" வகைகளைச் சார்ந்த நெல் கிலோ ஒன்றுக்கு 50/- ரூபா வீதமும் "நாடு" வகை நெல் கிலோ ஒன்றுக்கு 45/- ரூபா வீதமும் கொள்வனவு செய்யும் பொருட்டுத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று, மேற்குறிப்பிட்ட 2015 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் உரிய வகையில் மேற்கொள்ளப்படுவதனை உறுதி செய்வதற்காகவும் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்பார்வை செய்யும் பொருட்டும் நிதி அமைச்சின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் உரிய சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |