• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் - 2015
- யப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பு கற்கை நெறிகளை கற்பதற்கான வாய்ப்பு வழங்குவதன் மூலம் இலங்கையின் அரசாங்கத் துறைசார்ந்த நிறைவேற்று மட்ட உத்தியோகத்தர்களின் தேர்ச்சியினை விருத்தி செய்யும் பொருட்டு யப்பான் அரசாங்கத்தினால் 2010 ஆம் ஆண்டில் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் சார்ப்பில் யப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டம் இலங்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டிலும் 2014 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அதன் ஊடாக 90 உத்தியோகத்தர்களுக்கு கற்கை வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் தகைமை பெறும் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் இந்த ஆண்டின் செப்ரெம்பர் மாதத்திலிருந்து ஆரம்பமாகும். இதற்கமைவாக, அவர்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு 226 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட (அண்ணளவாக 245 மில்லியன் ரூபா) கொடையொன்றாக வழங்குவதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மை உடன்பாட்டினை தெரிவித்துள்ளதோடு, இதற்கான கொடை உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.