• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதை

- மத்திய அதிவேக பாதையை துரிதமாக நிருமாணித்து பூர்த்தி செய்வது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின்பால் மிக முக்கியமானதாகும். பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த அதிவேக பாதையின் முழு நீளத்தை நான்கு பகுதிகளாக பிரித்து அதன் நிருமாணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

* முதலாம் பகுதி - கடவத்தையிலிருந்து மீரிகம வரை - சீன எக்‌ஷிம் வங்கியினால் வழங்கப்படும் கடன் உதவியின் மீது;

* இரண்டாம் பகுதி - மீரிகமயிலிருந்து குருநாகல் வரை (அம்பேபுஸ்ஸ இணைப்பும் அடங்கலாக) - ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் கடன் உதவியின் மீது;

* மூன்றாம் பகுதி - பொத்துஹரயிலிருந்து கண்டி வரை - யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையினால் வழங்கப்படும் கடன் உதவியின் மீது;

* நான்காவது பகுதி - குருநாகலிருந்து தம்புள்ள வரை - உள்நாட்டு முறிவழங்குகை மூலம் திரட்டும் நிதியங்களை பயன்படுத்தி உள்நாட்டு ஒப்பந்தகாரர்களின் மூலம்.

மேற்குறிப்பிட்டவாறு கருத்திட்டத்தின் பணிகளை துரிதமாக தொடங்குவதற்குத் தேவையான கொள்வனவுக் குழுக்கள், இணக்கப்பேச்சுக் குழுக்கள், கடன் பற்றிய இணக்கப்பேச்சுக் குழுக்கள் போன்றவை பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் மீது பொதுத் திறைசேரியினால் நியமிப்பதற்காக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.