2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொழும்பு துறைமுகத்தின் தொழிற்பாடுகளுக்காக இரண்டு Tug கப்பல்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்தல் - கப்பற்றுறையின் வளர்ச்சியுடன் பாரிய கொள்கலன் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதோடு, இலங்கை துறைமுக அதிகாரசபையினால் இந்த கப்பல்களுக்கு வினைத்திறன் மிக்க Tug கப்பல் சேவையொன்றை வழங்குவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, வாடகை அடிப்படையில் இரண்டு Tug கப்பல்களை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரேரிப்புகளைக் கோருவதற்கும் வெற்றிகரமான பிரேரிப்புகளை பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |