2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய அளவைக் கூறுகள் ஆய்வுகூட நிருமாணிப்புப் பணிகளை பூர்த்தி செய்தல், உயர் துல்லிய குளிரூட்டல் முறைமையைத் தாபித்தல் - இலங்கையில் தேசிய அளவை ஆராய்ச்சி முறைமையை சரியாக பேணுவதற்காகவும் அதற்கு சருவதேச அங்கீகாரம் கிடைக்கும் விதத்திலும் ஆய்வுகூடமொன்றை சருவதேச தகவுத்திறன்களுக்கு அமைவாக வடிவமைத்து நிருமாணிக்கும் பணிகள் 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு அது ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டுவருகின்றதோடு, அதன் நிருமாணிப்பு பணிகள் அண்மையில் முடிவடையவுள்ளது. நிகழ்ந்துள்ள விலைகளின் அதிகரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்தக் கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டை 1,950 மில்லியன் ரூபாவிலிருந்து 2,433 மில்லியன் ரூபா வரை திருத்தும் பொருட்டும் ஆய்வுகூடத்திற்குள் உயர் துல்லிய குளிரூட்டல் முறைமையொன்றை தாபிப்பதற்குமான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |