2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை கடற்றொழில், நீரகவள மூலங்கள் சங்கத்தை கூட்டிணைத்தல் - நாட்டின் கடற்றொழில், நீரகவள மூலங்கள் துறையின் அபிவிருத்திக்கு உரியதாக ஆராய்ச்சியாளர்களினால் கண்டறியப்பட்ட மிக முக்கிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தகவல்களை ஒரு இடத்திற்கு கொண்டு வந்து அவற்றை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தும் பொருட்டு மைய நிறுவனமொன்றின் தேவை நீண்டகாலமாக நிலவி வந்ததோடு, இதற்குத் தீர்வாக பல்கலைக்கழகங்களினதும் உயர் கல்வி நிறுவனங்களினதும் கல்வியாளர்கள் உட்பட கடற்றொழில் துறை சார்ந்த அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களையும் உள்ளடக்கி இலங்கை கடற்றொழில், நீரகவள மூலங்கள் சங்கத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அடிப்படையினை ஏற்பாடு செய்யும் பொருட்டு இந்த சங்கத்தை கூட்டிணைக்கும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |