2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடுதல் - 2015 - தேசிய பாதுகாப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் 26 ஆம் திகதியன்று கொண்டாடப்படுவதோடு, இந்த தினத்தை நடப்பாண்டில் கொண்டாடுவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் "பாதுகாப்பான இலங்கை" என்னும் பிரதான தொனிப்பொருளின் கீழும் "ஒன்றிணைவோம் அனர்த்தங்களை விலக்குவதற்கு" என்னும் துணை தொனிப்பொருளின் கீழும் பொலன்நறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்துவதற்கும் அதற்கு ஒருங்கிணைவாக ஏனைய அமைச்சுக்களினதும் திணைக்களங்களினதும் உதவியுடன் நாடு தழுவிய ரீதியில் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு ஏ.எச்.எம்.பௌஸி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |