• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய நூலக, ஆவணமாக்கல் சேவைகள் சபையின் காணியை இறையிலி கொடையொன்றாக இந்த நிறுவனத்துக்கு உடைமமையாக்குதல்

- அறிவுள்ள சமூகமொன்றை உருவாக்கும் நோக்குடன் இலங்கை தேசிய நூலகத்தை தாபித்து மக்களின் அறிவுசார் உரிமையை பாதுகாத்தல், தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப பாவனையை ஊக்குவித்தல், நூல் வாசிப்பு வசதிகளை வழங்குதல், நூல் வெளியீட்டுக்கான உதவிகளை வழங்குதல் போன்றவை தேசிய நூலக, ஆவணமாக்கல் சேவைகள் சபையின் முக்கிய நோக்கமாகும். ஏற்கனவே, இந்த சபையானது கொழும்பு 07, சுதந்திர மாவத்தை, 14 ஆம் இலக்க மனையிடத்தில் நடாத்திச் செல்லப்படுவதோடு, வர்த்தக நோக்கின்றி இந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக ஒரு ஹெக்டயார் விஸ்தீரணமுடைய மேற்போந்த முகவரியில் அமைந்துள்ள காணி இதுவரை வழங்கப்பட்டிருந்த குத்தகை அடிப்படைக்குப் பதிலாக பணம் அறிவிடாது தேசிய நூலக, ஆவணமாக்கல் சேவைகள் சபைக்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.