2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாரியகொழும்பு நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ விருத்தி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - பாரியகொழும்பு நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ விருத்தி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் இரண்டாம் பகுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 35 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மேலதி நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |