2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முன்னுரிமை அடிப்படையில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குழாய்நீர் விநியோக சேவைகளை விஸ்தரிப்பதற்காக 22 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - குழாய்நீர் விநியோகத்தை விஸ்தரிப்பதற்காக முன்னுரிமை அடிப்படையில் உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட நிதியங்களின் கீழ் 22 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த 22 நீர்வழங்கல் கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை வங்கிக்கும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்குமிடையில் 3,499 மில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக திறைசேரி பிணையொன்றை வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |