2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை நகர மத்தி அபிவிருத்தி மற்றும் கலிடோ கரையோர அபிவிருத்தி கருத்திட்டம் - களுத்துறை நகரத்திலும் கலிடோ கரையோரத்திலும் நகர வசதிகள், சுற்றுலா மற்றும் களியாட்ட வசதிகள் உட்பட யாத்திரிகர்களின் வசதிகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்யும் பொருட்டு சுமார் 20 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கும் கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |