2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இளைப்பாறும் அரசாங்க சேவையாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்காக அரசாங்க வங்கிகளின் ஊடாக செலுத்தப்படும் சுழற்சி கடன் எல்லையை அதிகரித்தல் - வருடாந்தம் சுமார் 25,000 பேர்கள் வரை அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெறுவதோடு, அவர்களுடைய பணிகொடைகளை மிகத் துரிதமாக வழங்குவதற்காக அரசாங்க வங்கிகளின் ஊடாக இளைப்பாறல் பணிக்கொடையை வழங்கும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதோடு, இந்த நோக்கம் தற்போது வினைத்திறனுடனும் பயனுள்ள விதத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நோக்கத்தை எதிர்காலத்திலும் தடையின்றி பேணும் நோக்குடன் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பவற்றினால் ஓய்வூதியப் பணிப்பாளர் அதிபதிக்கு வழங்குப்படும் சுழற்சி கடன் வசதிகள் சம்பந்தமாக நிலவும் எல்லையை, சேவை வழங்கும் தேவையின் மீது சந்தர்ப்பத்திற்கேற்ப அதிகரிக்கும் பொருட்டு பொதுத் திறைசேரிக்கு அதிகாரத்தை கையளிப்பதற்காக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |