2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசர்நாய்கடிநோய் பற்றிய கட்டளைச்சட்டத்தையும் நாய்களைப் பதிவு செய்தல் கட்டளைச்சட்டத்தையும் திருத்துதல் - உள்ளூராட்சி துறைக்குரிய சட்டங்களை நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு திருத்தும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக விசர்நாய்கடிநோய் பற்றிய கட்டளைச்சட்டத்தையும் நாய்களைப் பதிவு செய்தல் கட்டளைச்சட்டத்தையும் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த கட்டளைச்சட்டங்களை இணைக்கும் சாத்தியம் பற்றி ஆராயும் பொருட்டு அமைச்சரவையினால் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் சிபாரிசின் பிரகாரம், இவ்விரு கட்டளைச்சட்டங்களையும் சட்டமொன்றாக இருக்குமாயின் அவற்றின் கீழ் கையளிக்கப்பட்டுள்ள பணிகளை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் கிடைக்கக்கூடியவாறு 1893 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, விசர்நாய்கடிநோய் பற்றிய கட்டளைச்சட்டத்தையும் 1901 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, நாய்களைப் பதிவு செய்தல் கட்டளைச்சட்டத்தையும் இணைத்து புதிய சட்டமூலமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |