• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் நிலையங்களின் நிருமாணிப்புக்கான மொத்த செலவு மதிப்பீடுகளை திருத்துதல்

- மோதல் நிலைமை முடிவுற்றதன் பின்னர், சிவில் நிருவாகத்தை பலப்படுத்தும் நடவடிக்கையொன்றாக வடக்கு பிரதேசத்தில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை விரிவுபடுத்துவதாகும். இதற்கமைவாக, யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையங்களை நிருமாணிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்குப்பட்டுள்ளதோடு, இந்த பொலிஸ் நிலையங்களை நிருமாணிப்பதற்காக மதிப்பிடப்பட்ட மொத்த செலவினை அதிகரிக்கும் தேவையுள்ளது. இதற்கமைவாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்குரிய மொத்த செலவு மதிப்பீட்டை 294.8 மில்லியன் ரூபாவிலிருந்து 484.1 மில்லியன் ரூபா வரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்குரிய மொத்த செலவு மதிப்பீட்டை 119 மில்லியன் ரூபாவிலிருந்து 176 மில்லியன் ரூபா வரையும் திருத்தியமைத்து குறித்த கருத்திட்டங்களின் மீதி வேலைகளை துரிதமாக நிறைவு செய்யும் பொருட்டு மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.