2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாரிய மாத்தளை நீர்வழங்கல் கருத்திட்டம், கண்டி வடக்கு பாததும்பர நீர்வழங்கல் கருத்திட்டம் - மாத்தளை மற்றும் கண்டி நகரங்களுக்கும் அதன் அண்மித்த பிரதேசங்களுக்கும் குடிநீர் விநியோகத்தை அதிகரிப்பதனையும் பப்புநிலையங்களை புதிதிதாக நிருமாணிப்பதனையும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதனையும் நோக்காகக் கொண்டு மேற்குறிப்பிட்ட இரண்டு கருத்திட்டங்களினதும் நடைமுறைப்படுத்தல் பணிகளை நடாத்திச் செல்வதற்கும் உரிய வங்கிகளுடன் கலந்துரையாடி தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |