2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களனி தெற்குக் கரை II ஆம் கட்டத்தை (KRB II) வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தம் - நாளொன்றுக்கு 180,000 கனமீற்றர் கொள்வனவு கொண்ட உத்தேச நீர்வழங்கல் நிலையத்தின் மூலம் களனி, கடவத்தை வத்தளை, பேலியகொடை, மஹர, ராகம, பியகம, வெலிசரை, கந்தானை, ஜா-எல, ஏக்கலை பிரதேசங்களில் ஏற்கனவே தழுவப்படாத பிரதேசங்களுக்கு குழாய் நீர் வழங்குவதற்கும் ஏற்கனவேயுள்ள நீர்வழங்கல் வசதியினை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |