2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2014‑10‑29 ஆம் திகதியன்று கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் இடம் பெயர்ந்த குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக வீடுகளை நிருமாணித்தல் - மேற்போந்த அனர்த்தத்தினால் கொஸ்லாந்தை மீரியபெத்த கிராமத்தில் 34 பேர்கள் மரணித்ததோடு, 57 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர்கள் அனர்த்தத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்தோர்களுக்கு வீடுகளை நிருமாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக 2015 ஒக்றோபர் மாதம் 15 ஆம் திகதியன்று வீடுகளின் நிருமாணிப்பு வேலைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு ஏ.எச்.எம்.பௌஸி அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. |