2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் 7 மாடி கட்டடத்தின் மீள் நிருமாணிப்பு - நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை மேல் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் நிறுவகிக்கப்படுகின்றது. வருடாந்தம் இது மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலிருந்து சுமார் 360,000 வெளிநோயாளர்களுக்கும் சுமார் 100,000 வதிவிட நோயாளர்களுக்கும் சேவையை வழங்குகின்றது. இந்த வைத்தியசாலையின் 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள நீர் கசிவும் மீதி திருத்த வேலைகளும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தினாலும் அணுசக்தி அதிகார சபையினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு செய்வதற்கும். திருத்த வேலைகள் முடிவுறும் வரை நீர்கொழும்பிலுள்ள வேறு பொருத்தமான கட்டடங்களிலும் வைத்தியசாலை மனையிடத்திலுள்ள தற்காலிக கட்டடங்களிலும் வைத்தியசாலை சேவையை நடாத்திச் செல்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்வத்றகும் உரிய புனரமைப்பு பணிகளை 500 மில்லியன் ரூபாவுக்கு அரச அபிவிருத்தி, நிருமாண கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்குமாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |