2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கும் Research Center for Eco-Environment Sciences நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - கண்டறியப்படாத சிறுநீரகநோய் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள் பற்றி ஆய்வு செய்வதற்கும் நோய் பரவலாக காணப்படும் இலங்கையிலுள்ள பிரதேசங்களுக்கு பொருத்தமான நீர் சுத்திகரிக்கும் நிலையான தொழினுட்பங்களை இனங்காண்பதற்குமாக மேற்போந்த புரிந்துணர்வு உடின்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |