• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெமட்டகொடை, மஹவெல ஒழுங்கையிலுள்ள வீடமைப்புத் தொகுதியின் பயனாளிகளுக்கு வீடுகளின் உரிமையை கையளித்தல்

- மேற்போந்த வீடமைப்புத் திட்டத்தில் குடியிருக்கும், அவர்களுடைய வீட்டு அலகுக்கான பெறுமதியை செலுத்தியுள்ள 21 பயனாளிகளுக்கு அறுதியுறுதி வழங்குவதற்காக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.