• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் கருத்திட்டங்கள் சார்பில் கொள்ளல் செய்யப்படும் காணிகளுக்கு நட்டஈடு செலுத்துதல்

- திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கண்டி, காலி, திருகோணமலை, அநுராதபுரம் போன்ற பிரதான நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக இனங் காணப்பட்டுள்ளது. இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களுக்காக காணி கொள்ளல் செய்யும் போது பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈடு செலுத்தும் போது அவர்களுக்கு மிக பயனுள்ள நட்டஈடு முறையான காணி கொள்ளல், மீள்குடியமர்த்தல் குழு மற்றும் மீள் குடியமரத்தல் விசேட குழு முறைகளை ஏற்புடைத்தாக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் காணி கொள்ளலுக்கு எதிராக நீிமன்ற நடவடிக்கைகளின் பால் ஊக்கம் குறையும்