• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறகஹஹேன நகர அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல்

- நகர அபிவிருத்தி அதிகாரசபையானது எதிர்கால நகர அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பொருத்தமானவாறு நாட்டின் சிறிய மற்றும் மத்தியதர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதோடு, இதன் கீழ் ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மொறகஹஹேன பிரதேசத்தை வலுவான வரத்தக உப நகரமொன்றாக அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, வசுத்தரிப்பிடம், வர்த்தக நிலையம், வர்த்தக கட்டடத் தொகுதி, வாராந்த சந்தை, பொது விளையாட்டு மைதானம் போன்றவற்றை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய அரசாங்க நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு சிறந்த திட்டத்துடன் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த பணிகளுக்குத் தேவைப்படும் 1,354 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய அரசாங்கத்திற்குச் சொந்தமான காணித் துண்டொன்றை இறையிலி கொடையொன்றாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்குமாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.