• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் கூட்டம் - 2015

- இலங்கையின் வர்த்தக சமூகத்திற்கும் அரசாங்க துறைகளுக்குமிடையில் நிலவும் நெருக்கமற்றத் தன்மையை தவிர்த்து அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கிடையில் சிறந்த உறவினை பேணுவதற்குத் தேவையான வசதிகளை செய்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும். வர்த்தக சமூகத்தினர் அவர்களுடைய பிரச்சினைகளை அரசாங்க துறையின் பிரதான நிறுவனங்களின் முகாமைத்துவத்துடன் நேருக்கு நேர் கலந்துரையாடி தீர்த்துக் கொள்வதற்கு இதன் ஊடாக வாய்ப்பு கிடைக்கின்றது. தேவைக்கேற்றவாறு ஆகக் குறைந்தது மாதத்திற்கு ஒருதடவையாவது இந்த மாநாட்டினை நடாத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.