• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாவட்ட செயலாளர்களை / அரசாங்க அதிபர்களை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல்

- பல்வேறு அமைச்சுக்களினால் சம்மேளங்கள் மற்றும் கலந்துரையாடலுக்காக மாவட்ட செயலாளர்கைளை / அரசாங்க அதிபர்களை அடிக்கடி கொழும்புக்கு அழைப்பதனால் மாவட்டத்தில் காணப்படும் கடமைகளை நிறைவேற்றுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆதலால், மாதமொன்றில் இரண்டு நாட்கள் மாநாடொன்றை கொழும்பில் நடாத்துவதற்கும் அனைத்து அமைச்சுக்களுக்கும் உரிய விடயங்களை கலந்துரையாடுவதற்கும் அச்சந்தர்ப்பத்தில் நேரங்களை ஒதுக்குவதன் மூலம் மாவட்ட செயலாளர்களை / அரசாங்க அதிபர்களை கொழும்புக்கு அழைப்பதை மட்டுபடுத்தும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.