2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கூட்டிணைந்த சமூக பொறுப்பு (Corporate Social Responsibility - CSR) நிதியத்தை அரசாங்க நிறுவனங்களினால் பயன்படுத்துதல் - அரசாங்க நிறுவனங்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றினால் இந்த நிதியத்தை செலவு செய்யும் முறைபற்றி இணங்கியொழுகப்பட வேண்டிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்கும், கூட்டு சமூக பொறுப்பு நிதியத்திலிருந்து நிதி பெற்றுக் கொள்வதற்குரிய கோரிக்கைகள் பற்றி தீர்மானிக்கும் பொருட்டும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழும் சனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் பிரதிநிதிகளையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்குமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |