2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக காணப்படும் பிரச்சினைகளையும் கருத்திட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் பற்றி அறிக்கையிடும் பொருட்டும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட அமைச்சு செயலாளர்களைக் கொண்ட சிரேட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசு உட்பட இது சம்பந்தமாகவுள்ள பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசு என்பன பிரகாரம் குறித்த கருத்திட்டம் சம்பந்தமான பணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பதற்கும் உரிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முழுமையான சுற்றாடல் பாதிப்பு மதிப்பீடொன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டும் இந்த பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் உரிய கருத்திட்டத்தின் பணிகளை மீள ஆரம்பிப்பது பற்றி பரிசீலனை செய்யும் பொருட்டும் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |