2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராணுவ வீரர்களுக்கான விஷேட சலுகை அட்டை ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதவற்காக செயற்பாட்டு ரீதியிலான சேவையில் ஈடுபட்டிருந்து உயிர்நீத்த, காணாமற்போன அத்துடன் அங்கவீனமுற்ற முப்படைகளையும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களங்களையும் சேர்ந்த இராணுவ வீரர்களையும் அவர்களில் தங்கி வாழ்ந்தோர்களையும் இனங்காண்பதற்கும் அவர்களுக்கு பல்வேறுபட்ட நலன்களை வழங்கும் நோக்கிலும் "இராணுவ வீரர்களுக்கான விஷேட சலுகை அட்டை" ஒன்றையும் "இலச்சினை" ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சுமார் 50 நிறுவனங்களில் பல்வேறுபட்ட சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இராணுவ வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். இதன்கீழ் சேவைகளை வழங்கும் போது இனம்காண்தல், முன்னுரிமை, கழிவு, சலுகை கொடுப்பனவு முறை, வட்டியற்ற கடன் வசதிகள், காப்புறுதி வசதிகள், போக்குவரத்து சேவை, சுகாதார சேவை, களியாட்ட வசதி, புலமைப்பரிசில் போன்ற விசேட நலன்களைப் பெற்றுக் கொள்வதறகு அவர்கள் உரிமை பெறுவர். பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |