2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை புகையிரத சேவையின் சேவை வழங்கும் ஆற்றலை பலப்படுத்துதல் - 2015 - 2020 தேசிய புகையிரத அபிவிருத்தி திறமுறை அனுகுமுறையின் கீழ் இனங்காணப்பட்டுள்ளவாறு இலங்கை புகையிரத சேவையின் சேவை வழங்கும் ஆற்றலை பலப்படுத்தும் பொருட்டு 18 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களையும் 160 பிரயாணிகள் பயணப் பெட்டிகளையும் 30 எண்ணெய் தாங்கி வெகன்களையும் கொள்வனவு செய்யும் பொருட்டு உள்ளக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |