• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி ஆணைக்குழுவின் புதிய அலுவலகத்திற்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்

- அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுவொன்றாக அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிதி ஆணைக்குழுவானது தேசிய கொள்கை உட்பட மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதோடு, மொத்த மாகாண சபை முறைமையின் மேற்பார்வையும் ஒழுங்குறுத்துகையும் இதன் ஊடாக செய்யப்படும். நிதி ஆணைக்குழுவுக்கு புதிதாக கட்டடமொன்றை இந்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான இராஜகிரிய, சரண மாவத்தை, 03 ஆம் இலக்க மனையிடத்திலுள்ள 60 பேர்ச்சர்ஸ் காணியில் நிருமாணிப்பதற்கும். அது சார்ந்த பணிகளை செய்வதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.