2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விஞ்ஞானிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் அத்துடன் கூட்டு உயிரினத் தொழினுட்ப ஆய்வுகூடமொன்றைத் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்குரிய பங்களிப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - மேற்போந்த விஞ்ஞானிகளின் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாவது இருநாட்டினதும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கிடையில் தொடர்பாடல் வழிகளை விரிவுபடுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு உட்பட நட்புறவை மேம்படுத்துதலாகும். அதேபோன்று, கூட்டு உயிரினத் தொழினுட்ப ஆய்வுகூடமொன்றைத் தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாவது உயர் தொழினுட்ப ஆராய்ச்சிகளை கூட்டாக மேற்கொள்தல், தொழினுட்ப ஒப்படைகளை ஊக்குவித்தல், விஞ்ஞான, தொழினுட்பத் துறைகளின் ஆற்றலை விருத்தி செய்தல் போன்றவையாகும். மேற்போந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு உயர் கல்வி, ஆராய்ச்சி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |