2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய விளையாட்டு விழா - 2016 - இந்த நாட்டில் விளையாட்டுத்துறையில் காணப்படும் திறமைகளை கண்டறிவதும் இந்த திறமைகளை மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு தேசிய விளையாட்டு விழா வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. இம்முறை 41 ஆவது தடவையாக நடாத்தப்படும் தேசிய விளையாட்டு விழாவுக்கான பணிகள் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றதோடு, இறுதி போட்டிகளுடனான விளையாட்டு விழா 2015 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பதுளை நகரத்தில் நடாத்தப்படும். இலங்கையர்கள் அனைவரினதும் பங்களிப்பும் அதேபோன்று கிராமிய சமூகத்தை பிரதான சமூக கட்டமைப்புடன் இணைப்பதையும் உறுதிப்படுத்தி 2016 தேசிய விளையாட்டு விழாவை வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடாத்துவதற்கும் இந்த பணிகளை ஒழுங்கமைப்பதற்காக சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்குமாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |