2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை களஞ்சிய முனைவிடம் வரை எண்ணெய் குழாய்கள் பதிக்கும் கருத்திட்டம் - 40 முதல் 70 வருட காலங்கள் பழமை வாய்ந்த தற்போது மிக பழுதடைந்த நிலையிலுள்ள கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை களஞ்சிய முனைவிடம் வரை எரிபொருள் கொண்டு செல்லப்படும் குழாய் முறைமையை நிருமாணிப்பதற்கும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் சம்பந்தமான முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளும் பொருட்டு வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றோலிய களஞ்சியத் தொகுதி கம்பனிக்கு பணிப்பு விடுப்பதற்கும் குறித்த ஆய்வுக்கு அமைவாக இந்த எண்ணெய் குழாய் முறைமையை நிருமாணிப்பதற்கும் உரிய நிருமாணிப்புக்காக தகைமைப் பெற்ற ஒப்பந்தகாரர் ஒருவரை தெரிவு செய்வதற்காக திறந்த சருவதேச கேள்விக் கோருவதற்குமாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |