2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பல்வேறுபட்ட நகர அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்குத் தேவையான காணி கொள்ளல் செய்யும் போது இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணித் துண்டுகளை அவற்றின் இருப்பாட்சியாளர்களுக்கு விற்பனை செய்தல் - நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 1980-1990 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறுபட்ட கருத்திட்டங்களுக்காக காணி கொள்ளல் செய்யும் போது குறித்த காணிகளில் குடியிருந்து வீடுகள் இல்லாமற்போன குறைந்த மற்றும் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த வருமானம் பெறுபவர்களின் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் அல்லது வீடுகளை நிருமாணிப்பத்றகான மாற்றுக் காணித் துண்டுகள் மாதாந்த வாடகை அடிப்படையில் / மாதாந்த நிலக்கூலி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காணிகளின் இருப்பாட்சியாளர்களின் கோரிக்கையின் மீது, அவர்களுக்கு காணி வழங்கும் சந்தர்ப்பத்தில் நிலவிய மதிப்பிடப்பட்ட வர்த்தக பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு இரத்தினபுரி, பேலியகொடை, பத்தரமுல்லை, இரத்மாலானை, மாதிவெல வீடமைப்பு தொகுதிகளில் உரிய காணித் துண்டுகளின் இருப்பாட்சியாளர்களுக்கு இயைபுள்ள காணிகளின் உரிமையை கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |