2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள் - மாகாண சபைகளின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்திற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியங்களை மாகாணங்களுக்கிடையில் குறித்தொதுக்கும் போது இணங்கியொழுகப்பட வேண்டிய கொள்கைள் பற்றி அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு சிபாரிசுகளைச் செய்வது நிதி ஆணைக் குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சமர்ப்பிக்கப்படும் நிதி ஆணைக் குழுவின் 2015 நிதி ஆண்டிற்கான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவத்றகும் குறித்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவித்து அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |