• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் பங்களிப்பு வீடமைப்பு அபிவிருத்தியை அடையாளப்படுத்தும் "தேசிய வீடமைப்புத் தினம்" பிரகடனப்படுத்தல்

- இலங்கையில் ஒவ்வொரு பிரசைக்கும் வீடொன்றை உரிமையாக்கிக் கொடுக்கும் அரசாங்கத்தின் கொள்கையை வெற்றி கொள்ளும் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை மிக பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக கூடிய மக்கள் பங்களிப்பினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் நாட்டில் பங்களிப்பு வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திகதியாகிய யூன் மாதம் 23 ஆம் திகதியை 2015 ஆம் ஆண்டிலிருந்து "தேசிய வீடமைப்புத் தினம்" ஆக பிரகடனப்படுத்துவதற்கும் இந்த தினத்திற்கு ஒருங்கிணைவாக யூன் மாதம் 23 ஆம் திகதியில் ஆரம்பித்து அடுத்துவரும் வாரத்தினை "வீடமைப்பு வாரம்" ஆக பிரகடனப்படுத்துவதற்கும் இந்த வாரத்திற்குள் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் மாண்புமிகு சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.