• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விதவைகள் மற்றும் வீட்டுத தலைவிகளாக உள்ள பெண்களை வலுவூட்டுதல்

- இலங்கை சனத்தொகையில் பெண்கள் 51 சதவீதத்தினை விஞ்சியுள்ளதோடு, இதில் கணிசமான அளவினர் கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக விதைவைகளாகியுள்ள அவர்கள் வீட்டுத் தலைவிகளாகவும் மாறியுள்ளார்கள். இந்தப் பெண்களை பொருளாதார, சமூக ரீதியில் வலுவூட்டுவதற்காக துரிதமாக நிகழ்ச்சித்திட்டமொன்றை அவர்கள் பெரும்பாலகவுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களைத் தழுவி நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.