2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை மாவட்ட செயலகத்திற்கு புதிய நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல் - வடமத்திய மாகாணத்திற்குரிய பொலன்நறுவை மாவட்டம் 3,337.9 சதுர கிலோமீற்றர்கள் விஸ்தீரணம் கொண்ட 07 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 295 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. தற்போது பொலன்நறுவை மாவட்டச் செயலகம் நடாத்திச் செல்லப்படும் கட்டடமானது சுமார் 53 வருடங்கள் பழைமைவாய்ந்ததாகும். இந்த அலுவலக கட்டடத் தொகுதியில் பிற திணைக்களங்களுக்கும் அமைச்சுகளுக்கும் சொந்தமான 25 இற்கு மேற்பட்ட அரசாங்க நிறுவனங்கள் உள்ளன. இந்த மாவட்ட செயலகத்திற்கு புதிய வசதிகளை வழங்கி பொதுமக்களுக்கு மிக பயனுள்ளதும் வினைத்திறன்மிக்கதுமான சேவையொன்றை வழங்குவதற்குத் இயலுமாகும் வகையில் மாவட்ட செயலக தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் அதற்குரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |