• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சமுத்திர தினத்திற்கு ஒருங்கிணைவாக 2015 செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை இலங்கை சமுத்திர நடவடிக்கைகள் வாரமாக பிரகடனப்படுத்தல்

- ஐக்கிய நாடுகளின் அமைப்பின் பூரண அனுசரணையுடன் சருவதேச சமுத்திர அமைப்பினால் கப்பல் மற்றும் சமுத்திர பணிகளின் முன்னேற்றம் மற்றும் உலக பொருளாதார அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு இந்த ஆண்டின் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி உலக சமுத்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அன்றைய தினத்திற்கான தொனிப்பொருள் "சமுத்திரக் கல்வியும் பயிற்சியும்" என்பதாகும். இதற்கமைவாக, செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் "இலங்கை சமுத்திர நடவடிக்கைகள் பற்றிய வாரம்: என பிரகடனப்படுத்துவதற்கும் உத்தேச நிகழ்ச்சித்திட்டங்களை இந்த காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.