• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் மக்கள் சீன குடியரசின் தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் வெப்பமண்டல கமத்தொழில் விஞ்ஞான நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை

- மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாவது தெங்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பலம்மிக்க ஒத்துழைப்பினை இருநாடுகளுக்குமிடையில் நிலைநாட்டி இந்த துறையில் விஞ்ஞாபன, தொழினுட்ப, திறன் அபிவிருத்தி உள்வாங்கப்பட்ட கூட்டு தெங்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிப்பதாகும். இதற்கமைவாக, அதிமேதகைய சனாதிபதி அவர்கள் இந்த ஆண்டில் மார்ச் மாதம் சீனக் குடியரசுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொண்டமை சம்பந்தமாக தழுவு அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கும் அது தொடக்கம் எதிர்வரும் மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.