2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டம் - மேற்பார்வை செய்வதற்கும் அறிக்கையிடுவதற்குமாக செயலாளர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தல் - இந்த கருத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளின் மீது தற்போது நிருமாணிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் கீழ் இனங்காணப்பட்டுள்ள குறைபாடுகளையும் நடவடிக்கைமுறைகளையும் சீர்செய்து கருத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கான சாத்தியம் பற்றி ஆராயும் நோக்கில் பிரதம அமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழ் உயர் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |