• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெற் பயிர்ச் செய்யும் நிலங்களில் நீர் மற்றும் சுற்றாடல் முறைமைகள் தொடர்பாக சருவதேச வலையமைப்பு" (INWEPF) இன் 12 ஆவது தொழிற்பாட்டு குழு கூட்டமும் கருத்தரங்கும்

- "நெற் பயிர்ச் செய்யும் நிலங்களில் நீர் மற்றும் சுற்றாடல் முறைமைகள் தொடர்பாக சருவதேச வலையமைப்பு" 2004 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட சருவதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றாகுமென்பதோடு, நெல் பயிர் செய்யும் நிலங்களில் சுற்றாடல் முறைமைகளின் நிலைபேறுடைய தன்மை பற்றி கவனம் செலுத்தி முறையான நீர் முகாமைத்துவத்தினை பேணுவதனை அடிப்படை நோக்காகக் கொண்ட அமைப்பொன்றாகும். இந்த சருவதேச வலையமைப்பின் 17 உறுப்பு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்படும் 12 ஆவது தொழிற்பாட்டுக் குழுக்கூட்டமும் மாநாடும் இலங்கையில் 2015 நவம்பர் நடாத்துவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் மாண்புமிகு காமினி விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.