2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிதாக மீள்குடியேற்றப்பட்ட உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோருக்கு வசதியளிப்பதற்குத் தேவையான மேலதிக நிதி ஒதுக்கீடு - உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களுடைய சொந்த கிராமங்களில் மீள குடியமர்த்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும். இந்த நோக்கத்தை வெற்றி கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அண்ணளவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 2,175 குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு 160 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |