2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II - சேதமடைந்து ஆபத்தான நிலையிலுள்ள மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீள் நிருமாணிப்புப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இந்த நீதிமன்ற கட்டடத் தொகுதியின் பணிகளை நடாத்திச் செல்வதற்காக மேலும் தேவைப்படும் வசதிகளை வழங்கும் பொருட்டு கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |