• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெடுஞ்சாலைகள் ஊழல் புலனாய்வு குழுவொன்றை நியமித்தல்

- அரசாங்கம் நெடுஞ்சாலை துறைக்கு 2011‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2015‑01‑08 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதோடு, நிருவாக, தொழினுட்ப, நிதி உட்பட ஏனைய செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்படக்கூடிய குறைபாடுகள் நிகழ்ந்துள்ளதா என்பது பற்றி நிர்ணயிப்பதற்கும் அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை கண்டுபிடிப்பதற்கும் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் இருக்கும் பொருட்டும் உரிய நடவடிக்கை முறைகளை மாற்றும் பொருட்டு பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கும் நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் ஊழல் புலனாய்வு பிரிவொன்றை நியமிக்கும் பொருட்டும் நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.