• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தரம்வாய்ந்த சுகாதார பராமரிப்பும் நோயாளர் பாதுகாப்பும் பற்றிய தேசிய கொள்கை

- இலங்கையில் பல்வேறு மட்டங்களில் சுகாதார சேவை நிறுவனங்களினால் வழங்கப்படும் நோயாளர் பராமரிப்பு சேவைகளின் தரம் பல்வகைப்பட்டதாகும். நோயாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி எல்லா நிலைகளிலும் மக்களுக்கு சமமான உயர் தரம்மிக்க சுகாதார சேவையொன்றை வழங்குவதன் மூலம் நோயாளிகள் தமக்கு அருகாமையிலுள்ள சுகாதார பராமரிப்பு நிறுவனங்களுக்கு செல்லாமல் இருப்பதை தடுக்கலாம். இதன் மூலம் பிரதான மருத்துவ மனைகளில் நோயாளர்களின் வருகை குறைவதோடு, ஆரம்ப மட்ட சுகாதார நிறுவனங்களின் சேவையை அதிகரித்துக் கொள்ளலாம். இதற்கமைவாக, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கையில் அரசாங்க மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.